மதுரையில் சாலை ஓரத்தில் இருக்கும் பிச்சைகாரர்கள், மனநலம் குன்றியவர்கள், என்று ஆதரவின்றி இருப்பவர்களுக்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்து இருக்கிறார் Akshaya Trust நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன். வெளிநாட்டில் கிடைத்த வேலையை உதறிவிட்டு இவர்களுக்கு சேவை செய்து வருகிறார். இவர் ஆரம்பித்த Akshaya Trust என்ற சிறிய தொண்டு நிறுவனம், சாலைஓரத்தில் இருக்கும் மனநலம்குன்றியவர்கள், பிச்சைகாரர்கள், என்று அவர்களுக்கு தினம் மூன்று வேலை உணவு கொடுப்பது, அவர்களை சுத்தம் செய்வது, என்று பல செயல்களை கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருகிறார்கள். இப்பொழுது 200 பேருக்கு இதை செய்து வரும் கிருஷ்ணன் ஒரு நாளைக்கு 8000 ருபாய் செலவு ஆகிறது என்கிறார். இவர் ஆற்றிவரும் தொண்டு மகத்தானது, கிருஷ்ணன் ஆற்றிவரும் தொண்டில் நம்மாலும் சிறு உதவியினை செய்ய முடியும்,வெளிநாட்டில் வசிக்கும் நல்ல உள்ளம் படைத்த பலர் இவருக்கு உதவி செய்து வருகிறார்கள்.கோயிலில் சென்று உண்டியலில் போடும் பணத்தினை இவர்களுக்காக நாம் வழங்கினால் அது கடவுளுக்கு செய்வதாகவே பொருள் படும். இதை வாசிக்கும் அன்பர்கள் இவருக்கு உதவ எண்ணினால் கீழ்க்கண்ட முகவரியில் கிருஷ்ணனை தொடர்பு கொள்ளலாம்.தன் வாழ்நாளையே இவர்களுக்கு செய்யும் சேவையாக செய்து வரும் கிருஷ்ணன் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம்.இவருக்கு CNN-IBN தொலைக்காட்சி விருது கொடுத்து கவுரவித்துள்ளது.தன் எதிர்கால கனவினை மறந்து இவர்களுக்காக சேவை செய்து வரும் கிருஷ்ணனை நாம் இரு கை கூப்பி தொழுவோம்.கிருஷ்ணன் முகவரி:
9, West 1st Main Street,
Doak Nagar Extn.,Madurai – 625 010.
Ph: +91-452-4353439, 2587104
Cell: +91-98433 19933
Email: ramdost@sancharnet.in
Website: http://akshayatrust.org
http://www.akshayatrust.org/rajtv.php






January 1, 2009 at 6:39 pm
Still, Tamilnadu is nothing doing for TamiEelam.Even though TamilNadu parties n people are not helping for the creation of tamileelam presently,atleast we all should try to help refugees who are in camps in TN.